Sunday 10 May 2020

இன்றைய சிந்தனை....

💗இன்றைய சிந்தனை....

*இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய...* 


*விட்டுக் கொடுப்பது,*
*அனுசரித்துப் போவது,*
*பொறுத்துப் போவது..!*

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. 
இந்த இடத்தில் ஒரு சந்தேகம்.

விட்டுக்கொடுப்பது என்று 
பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? 
கணவனா?  மனைவியா? 
பிரச்சினையே அங்கேதான் தொடங்குகிறது.

யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,
அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள்.

அன்புள்ளவர்களிடம் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும்.

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை நமக்குள்ளே உண்டு பண்ணணும் அதற்கான வழிமுறைகள் கீழே, 

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவு செய்யுங்கள். 
அது குடும்ப அமைதியைக் காக்கும். 

5.  ஒரு குடும்பத்தில் உள்ள 
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். 
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிற்க்கு இடம்  தரும். 


7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், 
தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையை பற்றி 
யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. 

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

*💗வாழ்க வளமுடன்💗*

No comments:

Post a Comment